உள்ளூர் செய்திகள்

வளர்ச்சித் திட்ட பணிகள் நேரில் ஆய்வு

Published On 2022-10-21 14:37 IST   |   Update On 2022-10-21 14:37:00 IST
  • வளர்ச்சித் திட்ட பணிகள் நேரில் ஆய்வு செய்தார்
  • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.46.90 லட்சம் மதிப்பீட்டில் 95 வீடுகள் பழுது பார்க்கும் பணியையும், ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் மீண்டும் கட்டும் பணியையும், ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் 14 எண்ணிக்கையிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணியையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம், பணிகள் தொடங்கிய காலம், திட்ட மதிப்பீடு, கட்டுமானப் பொருட்களின் விபரம் மற்றும் தரம், பணிகள் முடிவடையும் காலம் போன்றவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை தரமாகவும், சரியான நேரத்தில் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுருத்தினார்.

Tags:    

Similar News