உள்ளூர் செய்திகள்

பைக் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் காயம்

Published On 2023-09-30 14:25 IST   |   Update On 2023-09-30 14:25:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே 2 பைக் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் காயமடைந்தனர்
  • ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் இலையூர் கிராமத்திற்கு வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து இலையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக் மோதியது. இதில் சுரேஷ் மற்றும் எதிரே பைக் ஓட்டி வந்த குவாகம் வெட்டித்தெருவை சேர்ந்த சூர்யா (18) என்பவர் மற்றும் அவரது பைக்கில் உட்கார்ந்து வந்த அதே ஊரை சேர்ந்த சிந்தாமணி (22), அவரது ஒரு வயது மகள் அட்சயா. மேலும் அதே ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மனைவி அசோதை (52) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் 5 பேரும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News