உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

Published On 2023-05-10 11:38 IST   |   Update On 2023-05-10 11:38:00 IST
  • மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 40). இவரது மனைவி கவிதா(36). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர் அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் அவர் ஊருக்கு வந்தார். இதையடுத்து அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கவிதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சக்தி வேல் நேற்று முன்தினம் வீட்டில் சேைலயால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News