உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2022-07-25 15:47 IST   |   Update On 2022-07-25 15:47:00 IST
  • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • 2 குழந்தைகள் உள்ளனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேப்பங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி ஆசைவள்ளி (வயது 32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆசைவள்ளி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆசைவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News