உள்ளூர் செய்திகள்

ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Published On 2023-09-14 06:20 GMT   |   Update On 2023-09-14 06:20 GMT
  • ஆண்டிமடத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
  • போலீசாரின் திடீர் ஆய்வில் சிக்கியது

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பதாக ஆண்டிமடம் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்த ஹான்ஸ் 50 பண்டல் கூல் லீவ் 62 பண்டல் விமல் சைடு பாக்கு உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பொருளின் மதிப்பீடு சுமார் ரூ.40 ஆயிரத்திற்கு மேலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

Tags:    

Similar News