உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

Published On 2023-04-26 06:49 GMT   |   Update On 2023-04-26 06:49 GMT
  • 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல்
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்குந்தபுரம் கலியபெருமாள் மகன் பிரபாகரன் வீட்டில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றதாக இவரை கைது செய்து அவரிடமிருந்து 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News