உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் அருகே விளந்தை கிராமத்தில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா

Published On 2023-05-14 11:35 IST   |   Update On 2023-05-14 11:35:00 IST
  • ஆண்டிமடம் அருகே விளந்தை கிராமத்தில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெற்றது
  • பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தைகிராமத்தில் உள்ள, தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத மேல அகத்தீஸ்வரர் கோயிலில். நால்வர் குரு பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட அப்பர் குரு பூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு, மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகன், அகஸ்தியரை, தொடர்ந்து நாயன்மார்களில் நால்வர்களான. அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பன்னிரு திருமுறை சுமந்து தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி ஆராதனையுடன் கூடிய குரு பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் பாடல்களை பாடி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

Tags:    

Similar News