உள்ளூர் செய்திகள்

ஆடு திருடியவர் கைது

Published On 2022-09-04 08:19 GMT   |   Update On 2022-09-04 08:19 GMT
  • ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  • ஆட்டின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தது

அரியலூர்:

ஜெயங்கொண்டம் ஜோதிபுரத்தை சேர்ந்த கண்ணனின் மனைவி அம்சவல்லி(வயது 45). சம்பவத்தன்று மதியம் வீட்டின் எதிரில் மேய்ந்து கொண்டிருந்த அவருடைய ஆட்டை காணவில்லை. இது பற்றி அவர், அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த தகவலின்படி, அம்சவல்லியும், கண்ணனும் அன்புச்செல்வன் என்பவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, இறைச்சியாக்கி விற்கும் நோக்கத்தில் அந்த ஆட்டின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததாகவும், எனவே அன்புச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அம்சவல்லி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கீழத்தெருவை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அன்புச்செல்வனை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்."

Tags:    

Similar News