உள்ளூர் செய்திகள்
கடன் பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- கடன் பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி வனிதா(வயது35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வனிதா அவரது தந்தை கலியபெருமாளிடம் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கு கடன் தொல்லை அதிகம் இருப்பதால் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கலியபெருமாள் மருமகனிடம் இது குறித்து பேசியுள்ளார்.
பின்னர் காலை வனிதா வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு சிவலிங்கம் அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் வனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.