உள்ளூர் செய்திகள்

ரேசன் கடை பணியாளர்களுக்கு பரிசு

Published On 2023-05-09 11:39 IST   |   Update On 2023-05-09 11:39:00 IST
  • ரேசன் கடை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
  • சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டது

அரியலூர்:

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேசன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் 271 முழுநேர ரேசன் கடைகள், 194 பகுதி நேர ரேசன் கடைகள் என மொத்தம் 465 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 192 விற்பனையாளர்களும், 12 எடையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ரேசன் சடைகளில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்த நாகமங்கலம் ரேசன் கடை விற்பனையாளர் லட்சுமிக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், புதுக்குடி ரேசன் கடை விற்பனையாளர் மதுரை முருகனுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ், ஜெயங்கொண்டம் ரேசன் கடை எண் -1 எடையாளருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், அரியலூர் நகரம் ரேசன் கடை எண்-2 எடையாளருக்கு 2-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News