உள்ளூர் செய்திகள்

பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றிய கும்பல்

Published On 2023-10-08 08:38 GMT   |   Update On 2023-10-08 08:38 GMT
  • பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றிய கொடூரம்
  • பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்

   செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.இந்த மரம் அப்பகுதியில் ஆடுமாடு மேய்ப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களும் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேருடன் வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர்.பசுமையான ஆலமரத்தை கும்பல் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டியது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி நிண்ணியூர் மேலத்தெரு ஊராட்சி உறுப்பினர் கவிவண்ணியா, பார்வதி மற்றும் பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News