உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2023-05-27 11:26 IST   |   Update On 2023-05-27 11:26:00 IST
  • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் எள், கடலை, உளுந்து, கொப்பரை தேங்காய் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது வரை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதால் திடிரென வந்த மழையில் விவசாய பொருட்கள் நனைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து திருச்சி-சிதம்பரம் சாலையில் மழையில் நனைந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கொள்முதல் செய்த பொருட்களுக்கு உண்டான தொகையும் விவசாயிகளுக்கு தராமல் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா சோமசுந்தரம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாத், முத்துக்குமார், பெரியசாமி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீர்வு காணும் வரை சாலை மறியல் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் ஒருங்கிணைந்த அலுவலகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News