- வயர்மேனாக 10 ஆண்டாக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கறம்பக்குடி,
அரியலூர் மாவட்டம் கன்னிச்சாமி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு நீண்ட காலமாக குதிகால் வலி மற்றும் தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் வலி தீராத நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து மன வேதனையில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரவிச்சந்திரன் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.