உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-05-15 12:34 IST   |   Update On 2023-05-15 12:34:00 IST
  • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
  • இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 72), விவசாயி. இவரது தலையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக பல மாதங்களாக வலியினால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சின்னப்பிள்ளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News