உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-12-19 10:34 GMT   |   Update On 2022-12-19 10:34 GMT
  • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
  • கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்

அரியலுார்:

அரியலுார் ராஜாஜி நகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலத்தில், நாளை (செவ்வாய்கிழமை) முற்பகல் 11 மணியளவில் மாவட்ட அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, குறைகள் இருந்தால் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News