உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த டிரைவர் கைது

Published On 2023-05-26 05:15 GMT   |   Update On 2023-05-26 05:15 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த டிரைவர் கைது செய்யபட்டார்
  • இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (வயது29). டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் காமராசவல்லி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் தமிழ்ச்செல்வி (21) என்பவரை ரங்கசாமி குடும்பத்தினர் நேரில் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வியிடம் தனக்கு திருமணம் நடந்ததை கூறாமல் மறைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வியை அழைத்துச் சென்று அவசர அவசரமாக கடந்த 22-ம் தேதி திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ரங்கசாமிக்கு திருமணமானது தமிழ்ச்செல்விக்கு தெரியவந்தது. இதைப்பற்றி தமிழ்ச்செல்வி ரங்கசாமியிடம் கேட்டபோது தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார். மேலும் ரங்கசாமியின் முதல் மனைவிக்கும், ரங்கசாமிக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News