உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-10 10:23 IST   |   Update On 2023-10-10 10:23:00 IST
  • அரியலூரில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் நடைபெறறது

அரியலூர்,

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் ,மாணவர் சேர்க்கைக்கும் தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக கூறி அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, திராவிடர் கழகத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.தலைமை பேச்சாளர் க.சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்கள் இரா.திலீபன், ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் வி.ஜி.மணிகண்டன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News