உள்ளூர் செய்திகள்

கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2023-02-06 13:17 IST   |   Update On 2023-02-06 13:17:00 IST
  • முட்புதர் அண்டி துர்நாற்றம் வீசும் அவலம்
  • நீராடுவதற்கு சங்கடம் ஏற்படுவதாக வேதனை

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கழுகுமலை நாதர் மற்றும் விருகாம்பிகை உடனுறை பலமலைநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் அருகிலுள்ள திருக்குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்பொழுது அந்த குளம் முழுவதும் முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் பல நாட்கள் தேங்கி உள்ள நீரானது, பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. சிலர் குளத்திற்குள் குப்பைகளை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.மேலும் பிரதோஷ வழிபாட்டுக்கு வரும் சிவ பக்தர்கள் குளத்தில் குளித்துவிட்டு சிவனை தரிசிக்க வேண்டும். ஆனால் தற்போது சுகாதாரமற்ற நிலையில் குளம் இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு சங்கடம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தை சீரமைத்து தருமாறு கோவில் நிர்வாக துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் அறநிலைய துறை சார்பாக தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கி வருவது சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை தரும் விஷயமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால் இது பயன்பாடு அற்ற குளம் என கூறி கோவிலின் அடையாளமான இந்த குளம் அழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த குளத்தை மீட்டு எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News