உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்-ஊராட்சி துறை ஆணையர் ஆய்வு

Published On 2023-01-07 13:07 IST   |   Update On 2023-01-07 13:12:00 IST
  • வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி துறை ஆணையர் ஆய்வு செய்தார்
  • அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு கிராமங்களில் ரூ.1.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை கணக்கெடுப்பு பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், ஆன்லைன் வரி, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் போன்ற திட்டப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், இத்திட்டத்தில் செயல்படும் ஊராட்சிகளின் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்து, அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், அரசு அலுவலர்கள் அரசின் பணிகள் மக்களுக்கு சென்று சேரும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News