உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-31 06:26 GMT   |   Update On 2023-01-31 06:26 GMT
  • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
  • பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

அரியலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்களுக்குண்டான பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தூய்மைப் பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு,அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். செயலர் ஷேக்தாவூத் பங்கேற்று பேசினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மேற்கண்ட சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News