உள்ளூர் செய்திகள்

இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2023-04-24 06:47 GMT   |   Update On 2023-04-24 06:47 GMT
  • காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
  • மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சொர்ணலதா(வயது24). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில்நான் வயலுக்கு செல்லும்போது, செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஞானசேகரன் (35) என்பவர் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்வகை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News