வேளாண் பட்டாக்களை முழுமையாக கணினியில் பதிவேற்றம்
- பதிவேற்றம் செய்த ஊழியர்களுக்கு பாராட்டு
- அரியலூர் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்
அரியலூர்,
வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை முழுமையாககணினியில் பதிவேற்றம் செய்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.ஆட்சியர் அலுவலககூட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, செந்துறை வட்டம்அயன் தத்தனூர் கிராமத்தில் உள்ள 2,799 பட்டாக்களையும் முழுமையாக 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம்செய்த கிராம நிர்வாக அலுவலர் அ.ராஜமாணிக்கம், கிராம உதவியாளர் கோ.மீனா ஆகியோருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பட்டாக்களை முழுவதுமாககணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் (செந்துறை) பாக்கியம் விக்டோரியா உட்பட பலரும் உடனிருந்தனர்.