உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-07 15:23 IST   |   Update On 2023-09-07 15:23:00 IST
  • துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

அரியலூர்

அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பிரிவில் பல்வேறு ஊழல்கள் நடப்பதை கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அளவுக்கு அதிகமான பணிகளை ஒதுக்குவதை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News