உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

Published On 2023-01-16 06:54 GMT   |   Update On 2023-01-16 06:54 GMT
  • பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
  • கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

Tags:    

Similar News