அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- வரும் 27-ந் தேதி கடைசி நாள்
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என அரியலூர் மாவட்ட கலெக்டர் ெதரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவ டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணை யவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ண ப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ண ப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்க ள்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500 - மருத்துவப்படி ரூ.500 - அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் அளி க்கப்பட வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க ப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொ ள்ளப்பட மாட்டாது எனவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.