உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மூட்டை, மூட்டையாக வெடி பொருட்கள் பறிமுதல்

Published On 2023-10-11 12:13 IST   |   Update On 2023-10-11 12:13:00 IST
  • அரியலூர் மாவட்டம் விரகலூரில் மூட்டை, மூட்டையாக வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
  • வீடு வீடாக சோதனை செய்து போலீசார் நடவடிக்கை

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர்.வெடி விபத்து தொடர்பாக போலீசார் அப்பகுதியில் நடத்திய தொடர் விசாரணையில், திடீர் குப்பம் பகுதியில் வசிக்கும் 30 குடும்பத்தினர், வெடி தயாரிக்கும் ஆலைகளில் இருந்து நாள்தோறும் தேவையான மருந்துகளை பெற்று, தங்கள் வீடுகளில் வைத்து, காகித குப்பிகளில் நிரம்பி வெடி தயாரித்து வருவதாகவும், இதற்கான கூலி பெற்று வருவதாகவும் தெரிய வந்தது. அவ்வாறு வெடி மருந்துகளை போதிய அளவு ஸ்டாக் வைக்காமல், அப்பகுதியை சேர்ந்த 4 பேர் மூட்டை, மூட்டையாக வாங்கி வந்து வீடுகளில் ஸ்டாக் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு அந்தோணி ஆரி தலைமையிலான போலீசார், வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவல ருடன் அப்பகுதிக்கு சென்று வாகனத்தில் பொருத்த ப்பட்ட ஒலிப்பெருக்கி மூலமாக வீடுகளில் வைத்தி ருக்கும் வெடி மருந்து பொருட்களை ஒப்படைக்கு மாறு அறிவுறுத்தினர். மேலும் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை மேற்கொண்டனர்அப்போது ரவி, வாசு, காசி, கணேஷ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட பல வீடுக ளில் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும், கரி மருந்து, வெடி மருந்து உள்ளிட்ட வெடி பொருட்கள் மூட்டை, மூட்டையாக கைப்பற்றப்ப ட்டது. மேலும் சிலர் தங்களாகவே வந்து பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை ஒப்படைத்த னர். கைப்பற்றப்பட்ட அனைத்து வெடி மருந்து பொருட்களையும் போலீசார் குழித்தோண்டி புதைத்து அழித்தனர்.

Tags:    

Similar News