உள்ளூர் செய்திகள்

தம்பியை தாக்கிய அண்ணன் கைது

Published On 2022-09-08 07:16 GMT   |   Update On 2022-09-08 07:16 GMT
  • தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
  • வீட்டை இடித்ததை தட்டிக்கேட்டனர்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன்கள் பாண்டியன் (வயது 45), காமராஜ் (44). இந்தநிலையில் இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டை பாண்டியன் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இதனை தட்டிக்கேட்ட காமராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News