உள்ளூர் செய்திகள்

சிவாலயத்தில் ஆவணி பிட்டு திருவிழா

Published On 2022-09-06 08:18 GMT   |   Update On 2022-09-06 08:18 GMT
  • சிவாலயத்தில் ஆவணி பிட்டு திருவிழா நடைபெற்றது
  • வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சிவாலயத்தில் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்றது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிப்பட்ட சிவனின் கதையை போற்றும் விதமாக மதுரை உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆவணி பிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேவார திருமுறைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி கோவில் பிரகார உலா நடைபெற்றது. இதில் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News