உள்ளூர் செய்திகள்

கொத்தனாரை தாக்கியவர் கைது

Published On 2023-03-20 13:43 IST   |   Update On 2023-03-20 13:43:00 IST
  • 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்த பெண்ணுடன் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டதால் ஆத்திரம்
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

உடையார்பாளையம்

உடையார்பாளையம் கீழ ஜமுக்காளகார தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் சதீஷ்குமார்(32)கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வெங்கடேஷனுடைய(36). மச்சினி ரஞ்சினி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான ரஞ்சினியிடம் சதீஷ்குமார் போனில் பேசுவதை தெரிந்து கொண்ட வெங்கடேஷன் நேற்று முன்தினம் உடையார்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டல் முன்பு சதீஷ்குமாரை திட்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Tags:    

Similar News