உள்ளூர் செய்திகள்
மாமியார்-மருமகளை திட்டியவர் கைது
- குடிபோைதயில் தகராறில் ஈடுபட்டார்
- புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நீலாம்பாள் (60). இவரது மருமகள் பிரியங்கா (22). இவர்கள் வீட்டில் இருந்தபோது உடையார்பாளையம் காலனி தெருவை சேர்ந்த மதியழகன் மகன் தவசி (19) என்பவர் குடிபோதையில் இருவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீலாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தவசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.