உள்ளூர் செய்திகள்
- பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரியலூர்
கயர்லாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன்ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 70) என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முத்துசாமியை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.