உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே வாகன விபத்தில் காய்கறி வியாபாரி பலி

Published On 2023-02-15 11:57 IST   |   Update On 2023-02-15 11:57:00 IST
புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்னவளையம் அருகே மணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ்(வயது45). காய்கறி வியாபாரியான இவர் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவிலில் இருந்து சின்னவளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இடைக்கட்டு பிரிவு சாலையில் லாரியை முந்தி செல்ல முயற்சித்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் சுரேஷ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News