உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி விபத்து

Published On 2023-02-08 10:28 GMT   |   Update On 2023-02-08 10:28 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது
  • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சில மணி நேரம் போராடி டிரைவரை வெளியே மீட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துள்ளாரக்குறிச்சி பைபாஸ் சாலையில் நாமக்கலில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சத்துமாவு ஏற்றி கொண்டு டாரஸ் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஜல்லி ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி முன்னாள் போய்க்கொண்டிருந்த டாரஸ் லாரி பின்புறம் மோதியது. அதில் ஜல்லி ஏற்றி வந்த லாரி முன்பக்கம் நசுங்கியதால் டிரைவர் பாபு கால் மாட்டிக்கொண்டது. அருகில் இருந்தவர்கள் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாட்டிக்கொண்ட டிரைவரை மீட்பதற்கு முயற்சி செய்தனர். மேலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள தீயணைப்பு சேர்ந்த நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சில மணி நேரம் போராடி டிரைவரை வெளியே மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News