உள்ளூர் செய்திகள்

மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி

Published On 2023-02-08 09:46 GMT   |   Update On 2023-02-08 09:59 GMT
  • மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
  • அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே அருமடல் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் கடந்த 3-ந்தேதி மாலை வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அலமேலு மழைக்காக அருகே உள்ள புளியமரத்தடியில் ஒதுங்கி நின்றார். திடீரென்று மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத்தொடர்ந்து அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகம் வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.




Tags:    

Similar News