உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் 39 பேர் ஆப்சென்ட்

Published On 2023-05-08 04:58 GMT   |   Update On 2023-05-08 04:58 GMT
  • அரியலூரில் 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது
  • கடும் சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதி

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவிகள் அணிருந்த காதணி, தங்க சங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர், வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வை எழுத 2,078 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2039 பேர் எழுதினர். 11 மாணவர்கள், 28 மாணவிகள் என 39 பேர் தேர்வெழுத வரவில்லை.

Tags:    

Similar News