உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற 3 பேர் கைது

Published On 2023-02-05 12:42 IST   |   Update On 2023-02-05 12:42:00 IST
  • புகையிலை பொருட்கள் பறிமுதல்
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆண்டிமடம் மற்றும் கூவத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூவத்தூரில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூவத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த டோமினிக் சேவியரை(வயது 54) கைது செய்தனர். மேலும் ஆண்டிமடம் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற ராஜ்மோகன்(40), பூபதி(60) ஆகியோைர கைது செய்து, விற்பனைக்காக கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News