உள்ளூர் செய்திகள்

வீட்டில் பந்து விழுந்த விவகாரத்தால் 2 பேர் கைது

Published On 2023-06-13 11:52 IST   |   Update On 2023-06-13 11:52:00 IST
  • வீட்டில் பந்து விழுந்த விவகாரத்தால் 2 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தில் உள்ள கம்ப பெருமாள் கோவில் திடலில் மேல தெரு வெங்கடாசலம் மகன் அறிவு மணி (வயது28) என்பவர் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து அதே ஊரை சேர்ந்த தி.மு.க. கிளை கழக செயலாளர் பன்னீர்செல்வம் (49) என்பவருடைய வீட்டில் விழுந்துள்ளது. இதனை பார்த்த பன்னீர்செல்வம் பந்து இங்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அறிவுமணி அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாரம். இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதே போல் பன்னீர் செல்வம் தன்னை தாக்கியதாக அறிவுமணியும் புகார் அளித்துள்ளார். புகார்களின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News