உள்ளூர் செய்திகள்

மதுவிற்ற 2 பேர் கைது

Published On 2023-06-12 12:05 IST   |   Update On 2023-06-12 12:05:00 IST
  • மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் எல்லைக்கள் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 74), அரிசிக்கார தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (65) ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News