உள்ளூர் செய்திகள்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ்.ஐ. நடேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த வீரமணி மகன் மணிகண்டன்(31) என்பவர் கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகே சுடுகாடு பகுதியிலும், அஸ்தினாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் கல்வி(54) அவரது வீட்டின் பின்புறமும் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.