உள்ளூர் செய்திகள்
போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 17 மனுக்கள் பெறப்பட்டன.
- மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
- முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்:
போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களை பெற்று விசாரித்தார். மேலும் அவர் மனுதாரர்களின் குறைகளை கேட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.