உள்ளூர் செய்திகள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2022-11-04 15:08 IST   |   Update On 2022-11-04 15:08:00 IST
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
  • போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

அரியலூர்

அரியலூர் தேரடி அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராதம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடை–பெற்றது.

நிகழ்ச்சியில் போக்கு–வரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது

போக்குவரத்து விதி மீறல் புதிய அபராதம் விதிப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது, அரசின் உத்தரவை அமுல்படுத்துவது காவல்துறையின் கடமை–யாகும், போலீசார் வாகன தணிக்கையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மறுமுறை மீறினால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடம் இருக்கி–ன்றது.

ஆவணம் இன்றி சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதமும், வாகனம் வேகமாக ஓட்டி–னால் ஐந்தாயிரமும், மறுமுறை ஓட்டினால் பத்தாயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி–னால் ஆயிரமும்மறுமுறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் அபராதம் விதிக்க–ப்படும் காவல்துறை–யின் மூலம் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போக்கு–வரத்துதுறை போலீசார் எச்சரித்து–ள்ளனர்.

Tags:    

Similar News