உள்ளூர் செய்திகள்

ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2023-07-03 12:14 IST   |   Update On 2023-07-03 12:14:00 IST
  • ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
  • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர், 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, அமைச்சர்  அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கோட்டப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி) வடிவேல், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் உத்தண்டி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை நபார்டு உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் சரவணன், உதவி பொறியாளர் ராஜா, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர்கள் விக்னேஷ், திரு.முரளிதரன், ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News