உள்ளூர் செய்திகள்
- அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
- கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூர் தூனேரி ஹட்டியில் செல்வவிநாயகர் திருக்கோவில் அருகில் அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுச் செயலர் விசுவநாதன் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்தர் சமுதாயத்தின் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் குயின் சோலை, இட்டக்கல், அவ்வூர், ஹட்டியின் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.