உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே நிலத்தகராறில் தம்பி மண்டையை உடைத்த அண்ணன் கைது

Published On 2023-03-13 09:51 GMT   |   Update On 2023-03-13 09:51 GMT
  • சட கோபன் (வயது 40). சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது
  • சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார்.,

கடலூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தக்கா கிரா மத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் சட கோபன் (வயது 40). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார். சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது.

இந்நிலையில் சடகோ பன் தனது நிலத்தை உழுவதற்காக வழி கேட்டு தாயிடம் சென்றுள் ளார். அப்போது அண்ணன் சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சடகோபன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சடகோபன் மனைவி வேதநாயகி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகா ரளித்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News