உள்ளூர் செய்திகள்

அண்ணா உருவப்படத்திற்கு அடைச்சர் மூர்த்தி, ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்திய காட்சி.


சங்கரன்கோவிலில் அண்ணா நினைவு தினம் - அமைச்சர் மூர்த்தி, ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2023-02-04 07:24 GMT   |   Update On 2023-02-04 07:24 GMT
  • அண்ணாவின் 54-வது நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
  • வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அண்ணா படத்தி ற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, பரமகுரு முன்னிலை வகித்தனர். இதில்சிறப்பு அழைப்பா ளராக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அண்ணா படத்தி ற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா ஒன்றிய செயலாளர்கள் பூசை பாண்டியன், சேர்மத்துரை, வெற்றிவிஜயன், பெரியதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, சங்கரன்கோவில் முன்னாள் நகர செயலாளர் சங்கரன், நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி, விஜயா , பேரூர் செயலாளர்கள், டாக்டர் செண்பக விநாயகம், குருசாமி, ரூபிபாலசுப்பிரமணியன், மாரி முத்து,

தொ.மு.ச.முத்துக்குமார், நகர் அவைத்தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய் மற்றும் இளை ஞர் அணி சர வணன், பசுபதி பாண்டியன், முகேஷ், சண்முகராஜ், சண்முகராஜ் ,மூத்த உறுப் பினர்கள் கணேசன், சந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஜெயராணி, துரைப் பாண்டியன், ஜெயக்குமார், கணேசன், முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News