உள்ளூர் செய்திகள்

கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதி திடீர் சாவு

Published On 2022-07-23 10:07 GMT   |   Update On 2022-07-23 10:07 GMT
  • காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
  • பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

கோவை:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்ற காவலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.கடந்த 13-ந் காலையில் பழனிசாமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயில் அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News