உள்ளூர் செய்திகள்
நாங்குநேரியில் சாலை விபத்தில் முதியவர் பலி
- களக்காட்டில் இருந்து முதியவர் மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
- திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்காக பாய்ந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
நெல்லை:
நாங்குநேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் அதிசயமுத்துராஜ்(வயது 75). இவர் சம்பவத்தன்று களக்காட்டில் இருந்து மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்காக பாய்ந்தது.
இதில் மொபட்டில் இருந்து அதிசய முத்துராஜ் தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.