உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

Published On 2022-10-21 07:36 GMT   |   Update On 2022-10-21 07:36 GMT
  • திருநாவலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
  • கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் ஊர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலையில் விவசாய நிலத்துக்கு சென்றபோது கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்ப தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

தகவலின் பெயரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி மேகலை, பிரபாகரன், தனிபிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறை நிலை அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News