உள்ளூர் செய்திகள்
பெசன்ட் நகரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது
- உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
- கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
சென்னை:
அடையாறை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பை பெறுவதற்காக பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டை கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.