புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திட்டச்சேரியில், விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
- பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார்.
மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன்,புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்றனர்.
பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக திட்டச்சேரி பஸ் நிலையம் வழியாக பள்ளியில் முடிந்தது.
பேரணியில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் டென்னிசன், நற்குணம், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், செந்தில், ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.